search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் கைது"

    • கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
    • ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைபட்டி கிராமம் கூத்தாடிபாளையம் பூசாரி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (78), ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி அலுவலர். இவரது மனைவி லட்சுமி(72). இவர்களுக்கு ராஜா, ஜெயக்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று இரவு கந்தசாமி வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு குடும்பத்தினருடன் தூங்கச் சென்றுள்ளார். கந்தசாமி மற்றும் லட்சுமி ஒரு அறையிலும் அவரது மகன்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கந்தசாமி தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லட்சுமியின் தலையில் அம்மிக் கல்லை தூக்கி போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லட்சுமி பலியானார்.

    இதை அடுத்து சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரது மகன்கள் தங்களின் தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கந்தசாமி கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை செய்த கந்தசாமியிடம் கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் தனது மனைவியின் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெங்கடேசன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார்.

    திருப்போரூர்:

    திருப்போரூர், கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 29). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசனுக்கு மனைவி அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

    இதன்காரணமாக அனிதா கணவருடன் கோபித்துக் கொண்டு திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் உள்ள தன்னுடைய தாய்வீட்டிற்கு அடிக்கடி செல்வதும் பின்னர் வெங்கடேசன் சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்தும் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் மீண்டும் மனைவி அனிதாவிடம் நடத்தை தொடர்பாக பேசி தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் கத்தியால் மனைவி அனிதாவின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அனிதா ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டில் இருந்து வெளியே சாலையில் ஓடினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அனிதா மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய அனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அனிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே வெங்கடேசனை திருப்போரூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • இன்று அதிகாலை கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஜின்னா நகரை சேர்ந்தவர் இஸ்மாயில். புரோட்டா மாஸ்டர். இவரது மனைவி ஜனா பேகம் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    இதனால் வலி தாங்காமல் ஜனாபேகம் ரத்த வெள்ளத்தில் கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஜனா பேகத்தை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று அங்கிருந்த இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடும்ப தகராறில் கணவன்- மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயமாரி (வயது44). எலக்ட்ரீசியன். இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஜெயமாரிக்கும், அவரது மனைவி சந்தியாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நேற்று முன்தினம் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயமாரி, சந்தியாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சந்தியா சாப்பிடாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஜெயமாரி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவசகாயம் மற்றும் போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெயமாரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகில் உள்ள கோவுகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் கவுரி(22) என்பவருக்கும் சிவக்குமார்(25) என்பவருக்கும் கடந்த 9.9.2021-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்குபிறகு உடனடியாக குழந்தை வேண்டாம் என குழந்தை பிறப்பை தள்ளிபோட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கவுரிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் கவுரி நேற்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுரியின் தாய் நாகலட்சுமி வடமதுரை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் சிவக்குமாரின் கள்ளக்காதலால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சிவக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. வளைகாப்பு சமயத்தில் இந்த பிரச்சனை நீடிக்கவே கவுரி சத்தம் போட்டுள்ளார்.

    அதற்கு சிவக்குமார் அவ்வாறுதான் இருப்பேன். உனக்கு இஷ்டம் இருந்தால் என்னுடன் சேர்ந்து வாழலாம். இல்லையென்றால் செத்துபோ என கூறியுள்ளார். குழந்தை பிறந்த பிறகு மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டிற்கு குழந்தையை தூக்கி வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    கவுரியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் துன்புறுத்தி பேசியதால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவக்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்ததும், தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததும் உறுதியானது. இதனால் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
    • தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூரை அடுத்துள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி செல்வ பிரியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சின்னசாமி அடிக்கடி வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக செல்வபிரியா கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெரியவர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னசாமி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வ பிரியா கழுத்தறுக்கப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த சின்னசாமியை பிடித்து விசாரித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

    • நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.
    • நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர்.

    ஆலந்தூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(46). இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியை நூர் முகமது அடித்து, கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து நூர் முகமது மீது நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மனைவி புகார் அளித்தார்.

    இதை அடுத்து போலீசார், நூர் முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நூர் முகமது விசாரணைக்கு செல்லாமல், தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெளிநாட்டுக்கும் தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் குவைத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அதில் நூர் முகமது விமானத்தில் பயணம் செய்து வந்திருப்பதும், அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து நூர் முகமதுவை அதிகாரிகள் கைது செய்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்தனர். இதுபற்றி திருவாரூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    • குடும்ப தகராறில் கணவன் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்றார்.
    • புகாரின்பேரில் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் 6-வது வார்டு அருந்ததியர் ஓடைத்தெரு வை சேர்ந்தவர் உதய குமார்(31). இவரது மனைவி ராஜலட்சுமி(28). உதய குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் அவரது சகோதரிகளை தரக்குறை வான வார்த்தை களால் திட்டி வந்துள்ளார்.

    இதனை ராஜலட்சுமி கண்டிக்கவே அவர்களு க்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கீழே தள்ளி அவர் வாயில் விஷத்தை ஊற்றி உதயகுமார் கொலை செய்ய முயன்றார். ராஜலட்சுமி சத்தம்போடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றினர்.

    இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

    • கள்ளக்காதலை தட்டிகேட்ட மனைவியை கணவர் மற்றும் கள்ளக்காதலி ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஷோபனா(42). இவர் வேலூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் தங்கபாண்டியன் மற்றும் குழந்தைகளுடன் தேவாரத்தில் வசித்து வருகிறார். இதனிடையே தங்கபாண்டியனுக்கும் , கேரளமாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சதீஸ் மனைவி ரமா(33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

    ஷோபனா வேலை விசயமாக வெளியூரில் இருப்பதால் ரமாவுடன் தங்கபாண்டியன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதுகுறித்து ஷோபனாவுக்கு தெரியவரவே உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தங்கபாண்டியனை வரவழைத்து இனிமேல் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அதன்பிறகும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இதனை தட்டிகேட்ட ஷோபனாவை தங்கபாண்டியன் மற்றும் ரமா ஆகியோர் கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். படுகாயமடைந்த ஷோபனா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ேசர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து தேவாரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குபதிவு செய்து தங்கபாண்டியனை கைது செய்தார்.

    • குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது(43). வக்கீல். இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ர் உமர் முகமது தனது மனைவியை சரிமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் ஹாஜா ஜெய்னுல் அரபா மயங்கினார். இதைத் தொடர்ந்து உமர் முகமது தலைமறைவாகி விட்டார்.

    மறுநாள் ஹாஜா ஜெய்னுல் அரபாவிடமிருந்து போன் ஏதும் வராததை கண்ட அவரது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டிற்குள் படுகாயத்து டன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஹாஜா ஜெய்னுல் அரபா மற்றும் அவரது இரு குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து உமர் முகமதுவை கைது செய்யகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இரவுக்குள் கைது செய்கிறோம் என வாக்குறுதியளித்தார்.

    இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர் போலீசார் நேற்றிரவு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை கைது செய்து அழைத்து வந்து திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார்.
    • நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா (வயது 35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அபர்ணா தனது கணவருடன் தலித்வாடா கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அன்று மாலை நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிரபு கலந்து கொண்டு நடனம் ஆடியபடி சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த தகவல் பிரபுவின் மனைவி அபர்ணாவிற்கு தெரிய வந்தது.

    இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அபர்ணாவின் தாய் மகளுக்கு சாதகமாக பேசியதால் பிரபு அவமானமாக கருதினார். அருகில் இருந்தவர்கள் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்தனர்.

    அபர்ணாவின் தாய் வீட்டிற்கு வெளியே தூங்கினார். கணவன் மனைவி இருவரும் வீட்டில் உள்ள அறையில் தூங்கினர்.

    நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார். இதில் அபர்ணா துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது.
    • புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார்.

    வேளச்சேரி:

    சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஏரிக்கரை வசித்து வருபவர் முத்து. இவரது மனைவி புண்ணியவதி(வயது 46). இவர் சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு வேலை செய்து வந்தார். முத்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் லட்சுமி.

    இந்தநிலையில் லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு 7 மணியளவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்து, மனைவி புண்ணியவதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் புண்ணியவதி பரிதாபமாக இறந்தார்.

    புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. அவர் காயத்துடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே முத்து தலைமறைவானார்.

    இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை கைது செய்தனர்.

    ×